காலகுப்பைகளை
கிளறவேண்டாம்.
துயரம் தோய்ந்த
நாட்களுக்கு
திரும்பிப்போக
விரும்பவில்லை நான்
வலியை சுவாசித்து
வலிபருகி
வலியாகவே
வாழ்ந்த நான்
அசுரவளர்ச்சி
அவசியம் அடைவேன்..
ஏனெனில்
எனது
வேர்களில்நான்
ரத்தம்
ஊற்றியிருக்கிறேன்..
பாலமுரளிவர்மன்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment